close
Choose your channels

ஓபிஎஸ் அணியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்?

Saturday, February 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக அரசியல் சதுரங்க விளையாட்டு உச்சகட்டத்தில் உள்ள நிலையில் முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் கை ஓங்கி வருகிறது என்பது ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இருந்து வரும் செய்திகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

இன்று காலை கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. அசோக்குமார் மற்றும் நாமக்கல் தொகுதி எம்.பி. சுந்தரம் ஆகிய இரண்டு அதிமுக எம்பிக்களும், மாஃபா பாண்டியராஜன் என்ற அமைச்சரும் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சரான ஜெயகுமார் அவர்களும் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. வெகுவிரைவில் அவர் ஓபிஎஸ் அவர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரை அடுத்து சிறுபான்மை துறை அமைச்சர் நிலோபர் கபில், பால் வளத்துறை-ராஜேந்திர பாலாஜி, வணிக வரித்துறை-கே.சி. வீரமணி ஆகிய அமைச்சர்கள் இன்று மாலையே ஓ.பி.எஸ். வீட்டுக்குச் சென்று ஆதரவு தெரிவிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.