close
Choose your channels

போதை மருந்துக்கு அடிமையானவரா கிருத்திகா? தோழியின் திடுக்கிடும் தகவல்

Wednesday, June 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் நடிகை மற்றும் மாடலிங் கிருத்திகா நேற்று அவர் தங்கியிருந்த வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார் என்று வெளியான செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் அவர் ஏற்கனவே போதைக்கு அடிமையாகி இருந்ததாகவும், அவர் பலமுறை தற்கொலைக்கு முயன்றதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
கிருத்திகா கொலை வழக்கு குறித்து விசாரணை செய்து வரும் மும்பை போலீசார் டெல்லியில் உள்ள அவரது தோழி ஒருவரிடம் கிருத்திகா குறித்து விசாரித்தனர். அவரது தோழி கொடுத்த தகவலின்படி கிருத்திகா ஏற்கனவே ஒருவரை காதலித்ததாகவும், ஆனால் கிருத்திகா காதலித்த நபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்ததாகவும் தெரிவித்தார்.
இதனால் மனம் உடைந்த கிருத்திகாவுக்கு தான் மாடலிங் வேலை வாங்கி கொடுத்ததாகவும், சிலகாலம் ஒழுங்காக மாடலிங் செய்து கொண்டிருந்த அவர் பின்னர் போதை மருந்துக்கு அடிமையானதாகவும் கூறியுள்ளார்.
போதை மருந்து இல்லாமல் கிருத்திகாவால் இருக்க முடியாது என்றும், தனிமையில் இருந்ததால் மன அழுத்தம் அதிகமாகி அவர் ஏற்கனவே பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் அவரது தோழி திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தற்போது கிருத்திகாவின் காதலன் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.