close
Choose your channels

அரசியல்வாதிகள் - நடிகர்கள் வரவேண்டாம்: மாணவர்கள் எதிர்ப்பு

Tuesday, September 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஜனவரி மாதம் சென்னை மெரீனாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொண்டு ஆதரவு கொடுத்தனர். இந்த போராட்டத்தின் இறுதியில் ஒருசில வன்முறை சம்பவங்கள் நடந்தாலும் போராட்டத்தின் நோக்கம் வெற்றி பெற்றது. இருப்பினும் நடிகர்கள், அரசியல்வாதிகளால் சில சர்ச்சைகளும் எழுந்தன.

இந்த நிலையில் அனிதா பற்ற வைத்த நீட் என்னும் நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திலும் சில நடிகர்கள், அரசியல்வாதிகள் ஆதரவு கொடுத்து கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிய வந்துள்ள நிலையில் அரசியல்வாதிகள், நடிகர்கள் கலந்துகொள்ள மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த போராட்டம் முழுக்க முழுக்க அனிதாவின் உயிர்த்தியாகத்தை ஒட்டி ஆரம்பித்துள்ளதாகவும், நீட் தேர்வை நீக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும், இந்த போராட்டத்தில் எந்த ஒரு நடிகரும் அரசியல்வாதிகளும் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.