close
Choose your channels

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகையா?

Tuesday, February 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ஹாகர சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என சிறை அதிகாரிகளிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
சசிகலா மற்றும் இளவரசி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இருவருக்கும் சேர்த்து தனி அறை வழங்கப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக கட்டில் மட்டும் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் சிறையில் மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜெயலலிதாவுடன் சசிகலா சிறையில் இருந்தபோது முதல் வகுப்பு வசதி, வீட்டுச் சாப்பாடு, மின்விசிறி, அன்றாடம் செய்தித்தாள் ஆகியவை வழங்கப்பட்டன. ஆனால் தற்போது இந்த வசதிகள் சசிகலாவுக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சசிகலா உள்பட மூன்று பேர்களுக்கும் தலா ரூ.10 கோடி அபராதத்தொகையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தொகையை கட்டாத பட்சத்தில் அவர்கள் மேலும் சில நாட்கள் அல்லது மாதங்கள் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் சிறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.