close
Choose your channels

மீனவர் பலி விவகாரம். தமிழர்களை கேவலப்படுத்தும் சுவாமி

Tuesday, March 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று அதிகாலை தமிழக மீனவர் பிரிட்டோ இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூடு காரணமாக பலியான சோகத்தில் மீனவர்களும் தமிழக மக்களும் கொந்தளிப்பில் இருக்கும் நிலையில் இன்னொரு புறம் பாரதிய ஜனதா முத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

சுவாமி தனது சமூக வலைத்தளத்தில், 'தமிழ் பொறுக்கிகள் கட்டுமரங்களை வாடகைக்கு எடுத்து கொண்டு இலங்கை கடற்படையுடன் சண்டை போடுவதற்கு பதிலாக சாக்கடையில் ஒளிந்து கொண்டிருக்கின்றனர்' என்று பதிவு செய்துள்ளார்.

ஒட்டுமொத்த தமிழர்கள் கொதித்து எழுந்தால் இலங்கை கடற்படை என்ன, இலங்கையையே அழிக்கும் சக்தி உண்டு என்பதை சுப்பிரமணியன் சுவாமி புரிந்து கொள்ளும் நாள் வெகுதூரம் இல்லை என்று பலர் சமூக வலைத்தளத்தில் சுவாமியின் கருத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மீனவர் ஒருவரை இழந்து துக்கத்தில் இருக்கும் தமிழர்களுக்கு ஒரு தேசிய தலைவர் ஆறுதல் கூறவில்லை என்றாலும் பரவாயில்லை, இதுபோன்று அவதூறு சொல்வது எந்த வகையில் நியாயம் என்பதுதான் நடுநிலையாளர்களின் கேள்வியாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.