close
Choose your channels

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டு கொலை: பெங்களூரில் பரபரப்பு

Wednesday, September 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லங்கேஷ் பத்ரிகே என்ற பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக பணியாற்றி வந்த கவுரி நேற்று மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடலில் ஏழு குண்டுகள் பாய்ந்துள்ளதால் அவரது உயிர் பிரிந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிரபல ஆங்கில நாளேடான லங்கேஷ் பத்ரிகே என்ற பத்திரிகையில் வகுப்பு வாதம், மதவாதத்துக்கு எதிராகவும் குறிப்பாக இந்துத்துவாவை எதிர்த்தும் பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்த கவுரிக்கு ஏற்கனவே பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. மேலும் அவர் மீது இந்துத்துவ அமைப்புகள் பல அவதூறு வழக்குகளை தொடர்ந்து அந்த வழக்குகள் விசாரணையில் உள்ளன.

குஜராத் படுகொலைகள் குறித்த நூல் ஒன்றை கன்னடத்தில் மொழிபெயர்த்து கவுரி எழுதிய நூலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று கவுரி லங்கேஷ் அவரது வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் கதவை தட்டியுள்ளனர். கதவை கவுரி திறந்தவுடனே அவர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட் மர்ம நபர்கள் பின்னர் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்களுக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.

கவுரி லங்கேஷ் படுகொலைக்கு இந்தியா முழுவதிலும் உள்ள பிரபல எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.