close
Choose your channels

இந்திய ஊடகங்களுக்கு வேற வேலை இல்ல. ஜாமீன் பெற்றதும் கூறிய விஜய் மல்லையா

Tuesday, April 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இன்று லண்டனில் போலீசாரால் கைது செய்யப்பட்டு லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் அவருக்கு லண்டன் நீதிமன்றம் மூன்றே மணி நேரத்தில் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

விஜய்மல்லையாவின் கைது மற்றும் ஜாமீன் குறித்து கடந்த சில மணி நேரங்களாக இந்திய ஊடகங்களில் பரபரப்பான பிரேக்கிங் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. மூன்று மணி நேரத்தில் ஜாமீன் கிடைத்தது எப்படி என்பது குறித்து சில தொலைக்காட்சிகள் விவாதங்களையும் தொடக்கிவிட்டது.

இந்த நிலையில் தனது டுவிட்டரில் விஜய் மல்லையா கூறியிருப்பதாவது: இந்திய ஊடகங்கள் வழக்கம்போல் இந்த விஷயத்தை பெரிதாக்கியுள்ளன. ஏற்கனவே எதிர்பார்த்தது போலத்தான் இன்று நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இன்று விஜய் மல்லையா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்பது அவருக்கு முன்பே தெரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.