close
Choose your channels

முன்னாள் காதலியின் புகைப்படங்களை பேஸ்புக்கில் போட்ட வாலிபர் கைது

Monday, August 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் புகைப்படத்தை அவரது முன்னாள் காதலர் திருமணத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவு செய்ததால் கைது செய்யப்பட்டார்.

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவருக்கும், அந்தோணி ராஜேஷ்குமார் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர்களும் ஒப்புக்கொண்டனர். ஆனால் அந்தோணி குறித்து விசாரித்து பார்க்கும்போது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது என்பதும், அவருக்கு குழந்தை இருப்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு தயாராகினர். இந்த நிலையில் திருமணத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் அந்தோணி, மணப்பெண்ணின் புகைப்படங்களை, அவருடைய சம்மதம் இல்லாமல் ஃபேஸ்புக்கில் பதிவு செய்தார். இதுகுறித்து மணப்பெண்ணின் குடும்பத்தினர் செய்த புகாரின் அடிப்படையில் அந்தோணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.