close
Choose your channels

போலீசாரின் மெத்தனத்தால் உயிரோடு எரிக்கப்பட்ட பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்

Monday, December 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெண்களுக்கு நிகழும் பாலியல் தொல்லைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மீடூ உள்பட பல வழிகள் இருந்தாலும் தொடர்ந்து பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். இதில் கொடுமையிலும் கொடுமையாக பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள் கொடுக்கும் புகார்களை ஒருசில காவல்துறையினர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதுதான்.. இப்படி ஒரு கொடூரமான சம்பவம் உபி மாநிலத்தில் நடந்துள்ளது.

உபி மாநிலத்தில் உள்ள சீதாபூர் என்ற பகுதியை சேர்ந்த 28 வயது பெண், காட்டில் இயற்கை உபாதைக்காக சென்றபோது இரண்டு இளைஞர்கள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க இரண்டு முறை சென்றபோது காவல்துறை அதிகாரிகள் இந்த புகாரை ஏற்று கொள்ளவில்லை. அதனையடுத்து நேற்று 3வது முறையாக அந்த பெண் புகார் கொடுக்க சென்றார்.

அப்போது வழிமறித்த அந்த இரண்டு வாலிபர்கள் மறைவான பகுதிக்கு அந்த பெண்ணை தூக்கி சென்று மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தனர். இதனால் அந்த பெண் அலறினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தின் அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அந்த பெண் உயிருக்காக போராடி வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த பெண்ணிடம் புகாரை வாங்க மறுத்த காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.