ஐபிஎல் ஏலத்தில் லிட்டில் சச்சின்? குவியும் வாழ்த்துகள்!

இந்தியக் கிரிக்கெட்டில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து வரும் சச்சின் டெண்டுல்கரின் விளையாட்டையே இன்னும் ரசிகர்கள் மறக்கவில்லை. இந்நிலையில் அவருடைய மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இந்த மாதம் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டி பதிவு செய்து உள்ளார். இதனால் ரசிகர்கள் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சச்சின் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது சர்வதேச ரசிகர்களுக்கும் ஒரு லெஜண்டாகவே திகழ்ந்து வந்தார். இதனால் அவரை மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர், டெண்டுல்யா எனச் செல்லமாக ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் சச்சினுக்கு தொடர்ந்து ரசிகர்கள் இன்றுவரை ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்றைய கிரிக்கெட் வீரர்கள் பலரும் இவரை ரோல் மாடலாக வைத்து இருக்கின்றனர்.

இந்நிலையில் அவருடைய 21 வயது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் முதல் முறையாக ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்கிறார். வரும் 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் கலந்து கொள்கிறார். அவருடைய அடிப்படை விலை ரூ.20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பாகிஸ்தான் கொடியுடன் பாடகி ரிஹானா? வைரல் புகைப்படத்தின் உண்மை நிலவரம் என்ன?

அமெரிக்க பாப் பாடகியும் பிரபல நடிகையுமான ரிஹானா இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு இருந்தார்.

மகள் பிறந்த நாளில் ஆரி கொடுத்த ஆக்கபூர்வமான பரிசு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னரான ஆரி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதும் சரி, நிகழ்ச்சிக்கு பின்னரும் சரி ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

சென்னையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடும் இங்கிலாந்து வீரர்கள்… என்ன காரணம்?

இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

வலியில் துடித்த இங்கிலாந்து வீரர்: முதல் நபராக உதவிக்கு ஓடி வந்த விராத்: வைரல் வீடியோ

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் தொடங்கியது என்பது தெரிந்ததே.

அடித்தது ஜாக்பாட்: ஆர்யா சகோதரிக்கு எத்தனை கோடி பரிசு தெரியுமா?

நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு ஜாக்பாட் பரிசாக 32 கோடி லாட்டரி சீட்டு பரிசு கிடைத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது