close
Choose your channels

தடுப்பூசிக்கு பதிலாக வெற்று ஊசியை செலுத்திய நர்ஸ்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

Saturday, June 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பீகார் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும்போது அவசரத்தில் செவிலியர் ஒருவர் வெற்று ஊசியை இளைஞர் ஒருவருக்கு செலுத்தி உள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

பீகார் மாநிலம் சப்ரா மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி விநியோகத்தின்போது சாந்தாகுமார்(48) எனும் செவிலியர் தவறுதலாக வெற்று ஊசியை அசார் என்னும் இளைஞருக்கு செலுத்தி உள்ளார். அசாரின் நண்பர் விளையாட்டாக எடுத்த வீடியோவால் இந்த விஷயம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. இதனால் செவிலியர் சாந்தா குமாரை அம்மாவட்ட நோய்த்தடுப்பு அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிரடி காட்டி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுகுறித்து தடுப்பூசி செலுத்தும் இடத்தில் அதிகபடியான கூட்டம் இருந்தது. அங்குள்ள நிலைமைகளினால் மன அழுத்தத்தில் இருந்த செவிலியர் இவ்வாறு பதற்றத்தில் செய்துவிட்டார் என மாவட்ட நோய்த்தடுப்பு அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் பதற்றத்தில் நர்ஸ் செய்த இந்த காரியம் தற்போது அதிருப்தியோடு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.