close
Choose your channels

கனமழை எச்சரிக்கை எதிரொலி: சென்னையில் நாளை பள்ளிகள் விடுமுறை

Tuesday, November 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கஜா புயலை அடுத்து வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை தோன்றியுள்ளதை அடுத்து நாளை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நாளை மிலாது நபி என்பதால் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை என்றாலும் விடுமுறை அளிக்காத சில தனியார் பள்ளிகளுக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.