நடுரோட்டில் ரூ.2000 கோடி: மக்கள் குவிந்ததால் சென்னையில் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,October 26 2018]

ரூ.2000 கோடி ஏற்றி கொண்டு வந்த கண்டெய்னர் லாரி ஒன்று சென்னையில் நடுரோட்டில் திடீரென பழுதாகி நின்றதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மைசூரில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு கண்டெய்னர் லாரி ஒன்று சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான நோட்டுகளை ஏற்றிக்கொண்டு வந்தது. இந்த கண்டெய்னர் நேற்றிரவு சென்னை அமைந்தகரை பகுதிக்கு வந்தபோது கியர் பாக்ஸில் ஏற்பட்ட பழுது காரணமாக திடீரென நின்றது.

சுமார் ரூ.2000 கோடி பணத்துடன் நடுரோட்டில் கண்டெய்னர் லாரி நின்ற செய்தி அறிந்ததும் அந்த பகுதி மக்கள் கண்டெய்னர் லாரி அருகே குவிந்தனர். உடனடியாக இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் ரிசர்வ் வங்கி நிர்வாகிகள் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களை கண்டெய்னரை பாதுகாக்க அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது

ரிசர்வ் வாங்கி பாதுகாவலர்களும், காவல்துறையினர்களும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் உடனடியாக பணம் வைக்கப்பட்டிருந்த கன்டெய்னரை யாரும் நெருங்கிவிடாமல் கண்காணிப்பாக இருந்ததால் கண்டெய்னரில் இருந்த பணம் தப்பியது. அதன்பின்னர் கண்டெய்னர் லாரி பழுது நீக்கப்பட்டு ரிசர்வ்வங்கி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அமைந்தகரை பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More News

கசப்பான உண்மை குறித்து ரஜினிகாந்த் அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தனது ரசிகர்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

மீண்டும் இரட்டை வேடங்களில் சிம்பு!

'மன்மதன்' மற்றும் 'சிலம்பாட்டம்' படங்களை அடுத்து சிம்பு மீண்டும் இரட்டை வேடங்களில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஜப்பானில் திரையிடப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் - ஜிவி பிரகாஷ் படம்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'சர்வம் தாளமயம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து

'அர்ஜூன்ரெட்டி' ரீமேக் படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'அர்ஜூன்ரெட்டி' திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் சூப்பர் ஹிட்டாகியது என்பது தெரிந்ததே.

விக்ராந்த் படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதும் விஜய்சேதுபதி

கோலிவுட் திரையுலகில் மிகவும் பிசியான நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. இவருடைய கால்ஷீட் டைரி இரண்டு வருடங்களுக்கு நிரம்பி இருப்பதாக கூறப்படும்