கொரோனா ஆறுதல்!!! பாதிக்கப்பட்ட 80% பேர் தாங்களாகவே குணமாகின்றனர்!!! ICMR அறிவிப்பு!!!

  • IndiaGlitz, [Tuesday,March 24 2020]

 


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொரோனா வைரஸ் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் தாங்களாகவே குணமாகின்றனர் என்று குறிப்பிட்டு இருக்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குளிர் போன்ற காய்ச்சலை அனுபவிக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் தாங்களாகவே குணமடைகிறார்கள் என தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா தெரிவித்து இருக்கிறார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசிய பால்ராம் பார்கவா, “நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலையைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். இதில் 80% பேர் கடும் குளிர்க்காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். எனினும் அவர்கள் குணமடைகிறார்கள். 20% பேர் இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றை அதிகமாக அனுபவிக்கின்றனர். இதில் சிலரை மட்டுமே மருத்துவ மனைகளில் தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது“ எனத் தெரிவித்தார்.

மேலும், மருத்துவமனைகளில் 5% பேர் அனுமதிக்கப் பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு சில நேரங்களில் புதிய மருந்துகளும் அளிக்கப்பட்டு வருகிறது” என்றும் கூறினார். இதுவரை நாடு முழுவதும் 15,000 முதல் 17,000 பேருக்கு கொரோனா பாதிப்பு குறித்த சோதனைகளை நடத்தியிருக்கிறோம். மேலும் ஒரு நாளைக்கு 10,000 பேருக்கு சோதனை நடத்துவதற்கான மருத்துவ உபகரணங்கள் எங்களிடம் இருக்கிறது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.


கொரோனா பரவலைத் தடுக்கக முதலில் மக்கள் வெளியே வருவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் காற்றில் பரவுவது இல்லை, அது பாதிக்கப்பட்டவர்களின் மூலம் நீர்த்துளிகளில் பரவுகிறது. எனவே பொதுமக்கள் இந்தப் பாதிப்பு சங்கிலியை தடை செய்ய வீட்டில் தனியாக இருப்பதை கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 ஐ தாண்டியிருக்கிறது. மேலும், 9 உயிரிழப்பும் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் நோய் தொற்றில் இருந்து தாங்களாகவே மீண்டுவருகின்றனர் என இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்து இருப்பது மக்களிடையே சற்று ஆறுதலை வரவழைத்து இருக்கிறது.


 

More News

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா  ரூபாய் 1000 வழங்கப்படும் என முதல்வர்  பழனிசாமி அறிவிப்பு செய்துள்ளார்.

முதல்வர், துணை முதல்வரை சந்தித்த நடிகர் யோகிபாபு!

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு தற்போது அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஹீரோவாகவும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

சொந்த ஊருக்கு பைக்கில் சென்ற உதவி இயக்குனர் விபத்தில் பலி!

இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இரண்டு பேருக்கு மேல் கூடக்கூடாது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

கொரோனாவுக்கு “லாக் டவுன் மட்டுமே தீர்வாகாது“- WHO அறிவுறுத்தல்

“ஊரடங்கு எனப்படும் லாக்டவுனை மட்டும் அறிவித்துவிடுவது கொரோனா பரவலுக்கு முழுமையான தீர்வாகாது“ என உலக சுகாதார அமைப்பின் அவசரகால

ஆண்டவனே உங்க பக்கம்தான்: ரஜினியை வாழ்த்திய மூன்று பிரபலங்கள்

உலகமே கொரோனா அச்சுறுத்தலில் பரபரப்பாக இருந்தாலும் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி டிஸ்கவரி சானலில் ஒளிபரப்பப்பட்ட போது