close
Choose your channels

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000: முதல்வர் அறிவிப்பு

Tuesday, March 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 1000 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு செய்துள்ளார்.

கொரோனா காரணமாக தமிழக மக்கள் அனைவரும் வேலைக்கு செல்லாமல் இருக்கும் நிலையில் தற்கால நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 1000 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார். ரூ.1000 மட்டுமின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் வேலையின்றி வருமானம் இன்றி உள்ள ஏழை, எளிய மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடைபாதை வியாரிபாரிகளுக்கு பொது நிவாரண நிதி ரூ. 1000 மற்றும் கூடுதலாக ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும், கட்டட தொழிலாளர்கள், ஓட்டுநர் தொழில் சார்ந்தவர்களுக்கு நிவாரண நிதியாக தலா ரூ. 1000 வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.