பிறந்து 6 நாட்களேயான பெண் குழந்தைக்கு எருக்கம் பால் கொடுத்து சிசுக்கொலை!!! 

  • IndiaGlitz, [Thursday,March 19 2020]

21 ஆம் நூற்றாண்டிலும் சிலரிடம் பெண் பிள்ளை என்றால் தானாகவே ஒவ்வாமை வந்து விடுகிறது. இந்தப் பாலின வேறுபாடுகளுக்கு எதிராகப் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகளும் காலந்தோறும் செய்யப் படுகின்றன. 

பெண் சிசுக்கொலை, கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? எனக் கண்டறிவது போன்றவை எல்லாம் இந்தியச் சட்டப்படி கடுமையான குற்றமாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில் தேனி அடுத்த ஆண்டிப்பட்டியில் மூன்றாவதும் பெண் பிள்ளையாக பிறந்ததால் பெற்ற தாயும் அவரது பாட்டியும் சேர்ந்து பிறந்த குழந்தையை எருக்கம் பால் கொடுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மொட்டனூத்து கிராமத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சுரேஷ், அவரது மனைவி கவிதா இருவருக்கும் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 10 மற்றும் 8 வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி மூன்றாவதாக ஒரு பெண் பிள்ளை பிறந்தது. 

பிறந்து 6 நாட்களே ஆன நிலையில் குழந்தை இறந்துவிட்டதாக யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்புறம் புதைத்து விட்டனர். குழந்தையை காணாத நிலையில் அக்கம் பக்கத்தினர் சந்தேகப் பட்டு அம்மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அம்மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ராஜா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். மேலும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு குழந்தையின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.  
 

More News

ஒரே படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் 14 பாடல்கள்: மார்ச் 20ல் ரிலீஸ்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது பிசியான இசைப்பணியிலும் '99 சாங்ஸ்' என்ற திரைப்படத்தை தயாரித்து அந்த படத்திற்கு இசையமைத்தும் வருகிறார்.

கொரோனாவால் திணறும் ஐரோப்பிய நாடுகள்!!! 

உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியிருக்கிறது.

ஆபாச இணையதளத்தில் மீராமிதுன் புகைப்படம்: என்ன செய்கிறது சைபர் க்ரைம்?

தனது புகைப்படம் மார்பிங் செய்து ஆபாச இணையதளத்தில் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து சைபர் கிரைம் நடவடிக்கை எடுக்காதது ஏன்

கொரோனா எதிரொலி: தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்ட அமிதாப்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் உலக மக்கள் அனைவரையும் வீட்டுக்குள்ளே பாதுகாப்பாக இருக்குமாறும்,

கணவருடன் கோபித்து காணாமல் போன இளம்பெண்ணை தேடும் போலீஸார்

கணவருடன் சண்டை போட்டு கோபித்துக்கொண்டு காணாமல் போன சென்னையை சேர்ந்த இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்