close
Choose your channels

பிறந்து 6 நாட்களேயான பெண் குழந்தைக்கு எருக்கம் பால் கொடுத்து சிசுக்கொலை!!! 

Thursday, March 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

21 ஆம் நூற்றாண்டிலும் சிலரிடம் பெண் பிள்ளை என்றால் தானாகவே ஒவ்வாமை வந்து விடுகிறது. இந்தப் பாலின வேறுபாடுகளுக்கு எதிராகப் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகளும் காலந்தோறும் செய்யப் படுகின்றன. 

பெண் சிசுக்கொலை, கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? எனக் கண்டறிவது போன்றவை எல்லாம் இந்தியச் சட்டப்படி கடுமையான குற்றமாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில் தேனி அடுத்த ஆண்டிப்பட்டியில் மூன்றாவதும் பெண் பிள்ளையாக பிறந்ததால் பெற்ற தாயும் அவரது பாட்டியும் சேர்ந்து பிறந்த குழந்தையை எருக்கம் பால் கொடுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மொட்டனூத்து கிராமத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சுரேஷ், அவரது மனைவி கவிதா இருவருக்கும் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 10 மற்றும் 8 வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி மூன்றாவதாக ஒரு பெண் பிள்ளை பிறந்தது. 

பிறந்து 6 நாட்களே ஆன நிலையில் குழந்தை இறந்துவிட்டதாக யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்புறம் புதைத்து விட்டனர். குழந்தையை காணாத நிலையில் அக்கம் பக்கத்தினர் சந்தேகப் பட்டு அம்மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அம்மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ராஜா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். மேலும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு குழந்தையின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.  
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.