இந்த படம் சென்சாரில் எப்படி தப்பியது? த்ரிஷா படம் குறித்து கே.பாக்யராஜ் ஆச்சரியம்

  • IndiaGlitz, [Saturday,February 22 2020]

நடிகை த்ரிஷா நடித்த படம் ஒன்று சென்சாரில் எப்படி தப்பியது என்பதே தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக கே பாக்யராஜ் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நடிகை த்ரிஷா முக்கிய வேடத்தில் நடித்த ‘பரமபதம் விளையாட்டு’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிலையில் இயக்குநர் கே பாக்யராஜ் பேசியதாவது:

‘பரமபதம் விளையாட்டு’ என்ற டைட்டிலே மிகவும் நல்ல டைட்டில். வாழ்க்கையை குறிக்கும் டைட்டில். வாழ்க்கையில் ஏணி போல் ஏற்றமும் இருக்கும், பாம்பு போல் இறக்கமும் இருக்கும் இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை. வாழ்க்கையில் முன்னேற முயற்சிகள் கட்டாயம் தேவை முயற்சி இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். முயற்சி அடையாமல் உட்கார்ந்திருந்தால் தோல்வி உறுதி

மேலும் இந்த படத்தில் முதல்வராக நடித்திருக்கும் ஒருவர் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கின்றார். அப்போது சிசிடிவிவை அகற்றுங்கள், முதல்வர் இட்லி சாப்பிட்டார் போன்ற வசனங்கள் வருகிறது. இன்றைய சூழ்நிலையில் இந்த வசனங்கள் மற்றும் காட்சிகளோடு இந்த படம் எப்படியும் சென்சாரில் இருந்து தப்பியது என்பதே ஆச்சரியமாக உள்ளது. இருப்பினும் டிரைலரை பார்க்கும்போது இந்த படத்தின் கதை அம்சம் மிக சிறப்பாக இருக்கிறது என்பது தெரிகிறது. எனவே இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்று கூறினார்

More News

புரமோஷனுக்கு வரவில்லை என்றால் சம்பளம் கட்: த்ரிஷாவுக்கு தயாரிப்பாளர் எச்சரிக்கை

த்ரிஷா நடித்த 'பரமபதம் விளையாட்டு' படத்தின் புரமோஷன் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு எதிர்பாராத காரணத்தால் த்ரிஷாவால் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது

'ஆட்டோகிராப்' படத்தில் நடிக்க மறுத்த இரண்டு பிரபல நடிகர்கள்: இயக்குனர் சேரன் தகவல்

இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய 'ஆட்டோகிராப்' திரைப்படம் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் பார்த்த ஒவ்வொருவரும்

'இந்தியன் 2' விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்திய விஷால்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் நடந்த ஒரு கோர விபத்தில் இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணா உட்பட மூவர் பலியாகினர்

சிம்புவின் 'மாநாடு' படத்தின் அடுத்தடுத்த ஷெட்யூல் குறித்த தகவல்கள்

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

ஜப்பான் கப்பலில் சிக்கிய மகள்: பிரதமருக்கு தந்தை எழுதிய உருக்கமான கடிதம்

சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி ஆயிரக்கணக்கான உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.