close
Choose your channels

இந்த படம் சென்சாரில் எப்படி தப்பியது? த்ரிஷா படம் குறித்து கே.பாக்யராஜ் ஆச்சரியம்

Saturday, February 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை த்ரிஷா நடித்த படம் ஒன்று சென்சாரில் எப்படி தப்பியது என்பதே தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக கே பாக்யராஜ் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நடிகை த்ரிஷா முக்கிய வேடத்தில் நடித்த ‘பரமபதம் விளையாட்டு’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிலையில் இயக்குநர் கே பாக்யராஜ் பேசியதாவது:

‘பரமபதம் விளையாட்டு’ என்ற டைட்டிலே மிகவும் நல்ல டைட்டில். வாழ்க்கையை குறிக்கும் டைட்டில். வாழ்க்கையில் ஏணி போல் ஏற்றமும் இருக்கும், பாம்பு போல் இறக்கமும் இருக்கும் இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை. வாழ்க்கையில் முன்னேற முயற்சிகள் கட்டாயம் தேவை முயற்சி இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். முயற்சி அடையாமல் உட்கார்ந்திருந்தால் தோல்வி உறுதி

மேலும் இந்த படத்தில் முதல்வராக நடித்திருக்கும் ஒருவர் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கின்றார். அப்போது சிசிடிவிவை அகற்றுங்கள், முதல்வர் இட்லி சாப்பிட்டார் போன்ற வசனங்கள் வருகிறது. இன்றைய சூழ்நிலையில் இந்த வசனங்கள் மற்றும் காட்சிகளோடு இந்த படம் எப்படியும் சென்சாரில் இருந்து தப்பியது என்பதே ஆச்சரியமாக உள்ளது. இருப்பினும் டிரைலரை பார்க்கும்போது இந்த படத்தின் கதை அம்சம் மிக சிறப்பாக இருக்கிறது என்பது தெரிகிறது. எனவே இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்று கூறினார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.