தப்பியோடிய அதிமுக எம்.எல்.ஏவின் மணப்பெண் கூறிய காரணம்

  • IndiaGlitz, [Wednesday,September 05 2018]

பவானிசாகர் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரன் என்பவருக்கு 23 வயது சந்தியா என்ற பெண்ணை நிச்சயம் செய்து வரும் 12ஆம் தேதி திருமணம் நடத்த இருவீட்டார் திட்டமிட்டிருந்தனர். இந்த திருமணத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்வதாக கூறப்பட்டிருந்தால் திருமண ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த நிலையில் மணமகள் சந்தியா கடந்த 1ஆம் தேதி திடீரென மாயமானார். அவர் ஒரு இளைஞரை காதலிப்பதாகவும், தனது மகளை அந்த இளைஞரிடம் இருந்து மீட்டு தர வேண்டும் என்றும் சந்தியாவின் தாயார் காவல்துறையினர்களிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சந்தியாவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று சந்தியாவை திருச்சியில் கண்டுபிடித்த போலீசார் அவரை கோபி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். நீதிபதி முன் கண்ணீருடன் இருந்த சந்தியா, தனக்கும் ஈஸ்வரனுக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்றும் அப்பா வயது உள்ளவரை எப்படி திருமணம் செய்ய முடியும் என்றும், இந்த திருமணம் பிடிக்காமல் தான் ஓடிப்போனதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து பெற்றோருடன் சந்தியா செல்ல அனுமதித்த நீதிபதி, சந்தியாவை திருமணம் செய்ய பெற்றோர்கள் கட்டாயப்படுத்த கூடாது என்று அறிவுரை கூறினார்.

இந்த நிலையில் தனது திருமணம் திட்டமிட்டபடி அதே தேதியில் வேறொரு பெண்ணுடன் நடக்கும் என்றும் தனது பெற்றோர் பெண் பார்த்து வருவதாகவும் ஈஸ்வரன் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

More News

ஒரே வார்த்தையில் விஜிக்கு பல்பு கொடுத்த மும்தாஜ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களின் உண்மையான சொரூபம் தற்போது வெளிவந்து கொண்டிருப்பதால் நிகழ்ச்சியும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது

ஆசிரியர் தினத்தில் அட்லி கொடுத்த குருதட்சணை

இன்று ஆசிரியர் தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாடப்படும் இந்த ஆசிரியர் தினத்தில்

மும்தாஜூடன் விஜி மோதல்: உச்சக்கட்டத்தில் பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரிரு வாரத்தில் முடிவடையவுள்ளதால் போட்டியாளர்கள் தங்களை காப்பாற்றி கொள்ளவும், சக போட்டியாளர்களை வெளியேற்றவும் எதையும் செய்ய தயாராக உள்ளனர்.

செண்ட்ராயனுக்காக ஐஸ்வர்யா செய்வது தியாகமா? நாடகமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதை அடுத்து போட்டியாளர்களிடையான போட்டியும் கடுமையாகிவிட்டது. சக போட்டியாளர்களை வெளியேற்ற எதையும் செய்ய போட்டியாளர்கள் தயாராகிவிட்டனர்.

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் ராக்கெட் ராமநாதன் காலமானார்.

பழம்பெரும் நகைச்சுவை நடிகரும் பலகுரல் மன்னனுமான ராக்கெட் ராமநாதன் காலமானார். அவருக்கு வயது 74