close
Choose your channels

செண்ட்ராயனுக்காக ஐஸ்வர்யா செய்வது தியாகமா? நாடகமா?

Wednesday, September 5, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதை அடுத்து போட்டியாளர்களிடையான போட்டியும் கடுமையாகிவிட்டது. சக போட்டியாளர்களை வெளியேற்ற எதையும் செய்ய போட்டியாளர்கள் தயாராகிவிட்டனர்.

அந்த வகையில் நேற்று ஒரு டாஸ்க் அளிக்கப்பட்டது. அதன்படி போன் மூலம் சொல்லப்படும் டாஸ்க்கை குறிப்பிட்ட ஒருவரை அவருடைய ஒப்புதலோடு செய்ய வைக்க வேண்டும். ஆனால் ஐஸ்வர்யாவுக்கு நேற்று வழங்கப்பட்ட டாஸ்க்கில் செண்ட்ராயனிடம் பொய் சொல்லி அவருடைய தலைமுடியின் கலரை மாற்றினார். இதனால் சக போட்டியாளர்கள் செண்ட்ராயன் மீதும் ஐஸ்வர்யா மீதும் கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய டாஸ்க் செண்ட்ராயனுக்கு கொடுக்கப்படுகிறது. இதன்படி ஐஸ்வர்யாவின் தலைமுடி வெட்டப்பட வேண்டும் என்பதுதான் அந்த டாஸ்க். செண்ட்ராயனை ஏமாற்றியதால் குற்ற உணர்வில் இருக்கும் ஐஸ்வர்யா, தற்போது செண்ட்ராயனை காப்பாற்ற தனது தலைமுடியை வெட்ட சம்மதிக்கின்றார். அதனால் அவருடைய தலைமுடி வெட்டப்படுகிறது.

வழக்கம்போல் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றும் மும்தாஜ், 'என்னுடைய தலைமுடி இரண்டு இன்ச் போனல் கூட என் உயிரே போய்விடும்' என்று ஏற்றிவிடுகிறார். எப்படியோ, இந்த வாரம் மக்களிடம் இருந்து தப்பிக்க ஐஸ்வர்யா போடும் நாடகம் பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.