சொத்து கைக்கு வந்தவுடன் பெற்றோரை ஒதுக்கிய பிள்ளை… பின்பு நடந்த பெரிய டிவிஸ்ட்!

  • IndiaGlitz, [Saturday,January 16 2021]

 

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானகிராமன் எனும் விவசாயி தன்னுடைய சொத்தை தன் இளைய மகனுக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்து விட்டார். இப்படி ஒட்டுமொத்த சொத்தையும் எழுதிக் கொடுத்து விட்டு தன் மகனையே எதிர்ப்பார்த்து இருந்த நேரத்தில் மகனும் அவரை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார். இதனால் விரக்தி அடைந்த ஜானகிராமன் மூத்தக் குடிமக்கள் சட்டத்தின்படி தன்னுடைய சொத்தை மீண்டும் மகனிடம் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டார். இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

காரணம் ஒரு நிலத்தை மற்றவருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்த பின்பு அந்த நிலத்தின் மீது மீண்டும் உரிமை கொண்டாட முடியாது எனப் பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் வேலூர் அடுத்த மோட்டூர் எனும் கிராமத்தை சேர்ந்த ஜானகிராமன்- பத்மா தம்பதி தனது இளைய மகனுக்கு ஒன்றரை ஏக்கர் நிலத்தை பத்திரப் பதிவு செய்து வைத்தப் பின்பு மீண்டும் அதை பெற்றுக் கொண்டுள்ளனர்.

வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரத்தை நேரில் சந்தித்த ஜானகிராமன் தன்னுடைய மகன் தன்னை கவனிப்பதில்லை என்றும் இதை உணராமல் நிலத்தை எழுதி வைத்துவிட்டேன் மீண்டும் அதை பெற்றுத் தாருங்கள் எனக் கோரிக்கை வைத்தார். இந்த விவகாரத்தை விசாரித்த கலெக்டர் இத்தம்பதியை கவனிக்க யாரும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு மூத்தக் குடிமக்கள் சட்டத்தின்படி மீண்டும் நிலத்தை ஜானகிராமனுக்கு பெற்றுத் தந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் பெற்றோரை கண்டுகொள்ளாத பல பிள்ளைகளுக்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

More News

என் தாய் எங்களுக்கு  சொல்லிக் கொடுத்த முக்கியமான பாடம்: செல்வராகவன் உருக்கமான டுவீட்!

தமிழ் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு 'துள்ளுவதோ இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். அதன்பின்னர் 'காதல் கொண்டேன்'

சிம்புவின் 'பத்து தல' படத்தின் பொங்கல் ஸ்பெஷல் அறிவிப்பு!

சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் இந்த திரைப்படத்திற்கு பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துள்ளதை அடுத்து இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிநடை

அடுத்த படத்தில் சரி செய்து கொள்வேன்: 'மாஸ்டர்' நெகட்டிவ் விமர்சனம் குறித்து லோகேஷ்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த 13ஆம் தேதி தமிழகம் உள்பட இந்தியா உலகம் முழுவதும் வெளியானது

நாளை பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனை மணி நேரம்: கமல்ஹாசன் அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே இன்றும் நாளையும் நடைபெற போகிறது என்பதும் 105 நாட்களாக நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பதை கமல்ஹாசன் நாளை அறிவிக்க இருக்கிறார் என்பதும் தெரிந்ததே 

'வலிமை' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் எப்போது? படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவல்!

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் அடுத்த மாதம் நிறைவடைந்து விடும்