close
Choose your channels

நாளை பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனை மணி நேரம்: கமல்ஹாசன் அறிவிப்பு!

Saturday, January 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே இன்றும் நாளையும் நடைபெற போகிறது என்பதும் 105 நாட்களாக நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பதை கமல்ஹாசன் நாளை அறிவிக்க இருக்கிறார் என்பதும் தெரிந்ததே.

ஆரி, பாலாஜி, ரம்யா, ரியோ மற்றும் சோம் ஆகிய ஐந்து பேர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் நிலையில் இன்று ஒருவர் வெளியேற்றப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டைட்டில் வின்னர் யார் என்பதை தெரிந்துகொள்ள பிக்பாஸ் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் சற்று முன்னர் வெளியான 3வது புரோமோ வீடியோவில் கமல்ஹாசன் கூறியதாவது:

இறுதி கட்டத்திற்கு வந்து விட்டோம். இங்கே ஐவரில் ஒருவர் வெற்றியாளர். அதை பார்க்க போகிறோம். உங்களைப் போல் நானும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன். உங்கள் முடிவுகள் அறிவிக்கப்பட போகும் நாள் நாளை. நாளை 6 மணி நேரம் நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே நாளை மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடைபெறும் என்று தெரிகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.