பிதாமகனை மிஞ்சிய சேவை… இடுகாட்டில் கெத்துக்காட்டும் மூதாட்டி!

  • IndiaGlitz, [Wednesday,June 23 2021]

பொதுவா ஊர் கிராமங்களில் உள்ள இடுகாடுகளில் வெட்டியான் இருப்பதைப் பார்த்து இருப்போம். “பிதாமகன்“ படத்தில் நடிகர் சூர்யா பிணங்களை எரிப்பது, புதைப்பது, இறுதி காரியங்களைச் செய்வது என வெட்டியான் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து இருப்பார். இப்படியொரு வேலையை அதுவும் மூதாட்டி ஒருவர் செய்து வருகிறார் என்பதுதான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

திருச்சி மாவட்டம் கிராப்பட்டி எனும் ஊரில் உள்ள இடுகாட்டில் மாரியாயி எனும் மூதாட்டி கடந்த 17 வருடங்களாக வெட்டியான் வேலை பார்த்து வருவதாகக் கூறியுள்ளார். மேலும் தனது கணவர் இந்தத் தொழிலை செய்து வந்ததாகவும் அவருடைய இறப்புக்கு பிறகு தனக்கு இருந்த ஒரே மகனும் இந்தத் தொழிலை கைவிட்டு விட்டதால் தானே இந்த வேலையைத் தொடர்ந்து செய்து வருவதாகக் கூறுகிறார்.

கிராமங்களில் பெண்களை இடுகாடுகளுக்கு அனுப்பும் வழக்கம் இருப்பதில்லை. அது சொந்த கணவனின் இறப்பாக இருந்தாலும் சரி பெண்களை ஒதுக்கியே வருகின்றனர். இப்படி இருக்கும்போது மாரியாயி கடந்த 17 வருடங்களாக வெட்டியான் செய்யும் அதே வேலையைத் தொடர்ந்து செய்து வருவதாகக் கூறி இருக்கிறார். பிணங்களுக்கு குழி வெட்டுவதைத் தவிர்த்து மற்றபடி இறுதி காரியங்களை செய்வது, பிணங்களை எரிப்பது என அச்சமின்றி செய்து வருகிறார்.

மேலும் கொரோனா நேரத்தில் ஒவ்வொரு நாளும் 20 க்கும் மேற்பட்ட பிணங்களை தான் எரித்ததாக மாரியாயி கூறியுள்ளார். இதனால் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்ட அவர் தற்போது தனது வெட்டியான் வேலையைத் தொடர்ந்து இருக்கிறார். இதனால் வேலையை விடும்படி சொந்தங்களே எச்சரித்த பின்பும் தனது இறுதி மூச்சு வரை என்னுடைய சேவை தொடரும் என கூறியுள்ளார் மாரியாயி. மனிதம் போற்றும் சேவை தொடரட்டும்.

More News

உலகிலேயே சொந்தமாக ரயில் வைத்து இருந்த சொகுசு தமிழர்… சிறப்பான வரலாற்றுப் பக்கங்கள்!

தனி விமானம் பயன்படுத்தும் இந்தக் காலத்தில்கூட யாரும் ஒரு ரயிலைச் சொந்தமாக வைத்து இருப்பதில்லை

நிர்வாண வீடியோக்கள் நிறைந்த செல்போன்....! மணிகண்டனின் தில்லாலங்கடி வேலைகள்....!

கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனின், செல்போனில் ஏராளமான நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷை அடுத்து டான்ஸ் மூலம் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த 'பிகில்' நடிகை!

தளபதி விஜய் நேற்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடியதை அடுத்து அவருடன் நடித்த நடிகர்-நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை

'மாநாடு' படத்தின் அடுத்தகட்ட பணியை தொடங்கிய நாயகி கல்யாணி!

சிம்பு நடித்துவரும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்துவிட்டதாகவும் இன்னும் இரண்டு நாள் படப்பிடிப்பு மட்டுமே உள்ளது என்பதும் அந்த படப்பிடிப்பும் இன்னும் ஒரு சில நாளில் தொடங்க

'மாஸ்டர்' சாதனையை முறியடித்தது 'பீஸ்ட்'!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் சாதனையை அவரது அடுத்த திரைப்படமான 'பீஸ்ட்'முறியடித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.