close
Choose your channels

'மாநாடு' படத்தின் அடுத்தகட்ட பணியை தொடங்கிய நாயகி கல்யாணி!

Wednesday, June 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்துவரும் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்துவிட்டதாகவும் இன்னும் இரண்டு நாள் படப்பிடிப்பு மட்டுமே உள்ளது என்பதும் அந்த படப்பிடிப்பும் இன்னும் ஒரு சில நாளில் தொடங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் சமீபத்தில் ’மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ’மாநாடு’ படத்தின் அடுத்த கட்ட பணிகள் தொடங்கியுள்ளன

’மாநாடு’ படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாகவும் முதல் கட்டமாக இந்த படத்தில் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் தனது பகுதியின் டப்பிங் பணியை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த புகைப்படம் ஒன்றை கல்யாணி பிரியதர்ஷன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது இஒணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெங்கட் பிரபு இயக்கிய ’மங்காத்தா’ படத்தின் பட்ஜெட்டை விட ’மாநாடு’ படத்தின் பட்ஜெட் அதிகம் என்று சமீபத்தில் அவர் கூறிய நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படம் ஆயுதபூஜை விடுமுறையின்போது வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.