குழந்தையை தரதரவென தரையில் போட்டு அடித்தார்… பிரபல சீரியல் நடிகை புகார்!

  • IndiaGlitz, [Saturday,May 13 2023]

இந்தி தொலைக்காட்சியில் பிரபல நடிகையாக இருந்துவரும் சந்திரிகா சாஹா என்பவர் தனது 15 மாதக் குழந்தையை கணவரே தரையில் இழுத்துப்போட்டு மூன்று முறை அடித்தார் என்று பரபரப்பு புகார் அளித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தி தொலைக்காட்சியில் சிஐடி, அதாலத் போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சந்திரிகா சாஹா. தற்போது 41 வயதாகும் இவர் முதல் திருமணம் தோல்வியில் முடிவடைந்த நிலையில் விவாகரத்துப் பெற்றுள்ளார். பின்பு இளம் தொழிலதிபர் அமன் மிஸ்ரா என்பவரோடு பழகிவந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் 21 வயதே ஆன அமன் மிஸ்ரா மூலம் சந்திரிகா கர்ப்பம் அடைந்த நிலையில் அதை அமன் மிஸ்ராவே கலைக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். ஆனால் குழந்தையைப் பெற்றெடுத்த வளர்த்துவந்த நிலையில் கடந்த மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனாலும் குழந்தை மீது பற்றில்லாத அமன் மிஸ்ரா எப்போதும் குழந்தையிடம் கடுகடுப்புடன் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மே 5 ஆம் தேதி சமையல் அறையில் இருந்த சந்திரிகா குழந்தையைப் பார்த்துக் கொள்ளுமாறு தனது கணவரிடம் கூறியிருக்கிறார். ஆனால் குழந்தை திடீரென்று அழுததை தொடர்ந்து ஓடிவந்து பார்த்த சந்திரிகா குழந்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டதை அறிந்து மலாடு பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக கணவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சந்திரிகா ஒரு கட்டத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து தனது கணவர் 15 மாதக் குழந்தையை தரதரவென தரையில் இழுத்துப்போட்டு 3 முறை தாக்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து பங்கூர் காவல் நிலையத்தில் நடிகை சந்திரிகா புகார் அளித்த நிலையில் போலீஸார் தற்போது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

'சென்னையில் ஒரு நாள்' உண்மை சம்பவத்தின் நாயகனை சந்தித்தேன்: சரத்குமாரின் நெகிழ்ச்சி பதிவு..!

கடந்த 2013 ஆம் ஆண்டு 'சென்னையில் ஒரு நாள்' என்ற திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான நிலையில் அந்த உண்மை சம்பவத்தின் உண்மை நாயகனை தான் நேரில் சந்தித்ததாக

'STR 48' படத்தில் சிம்புவை விட பலமடங்கு சம்பளம் வாங்கும் நடிகை தான் நாயகியா?

சிம்புவை விட பல மடங்கு சம்பளம் வாங்கும் பிரபல நடிகை ஒருவர் 'STR 48' படத்தில் நாயகி ஆக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

முதல்முறையாக 'பேபி பம்ப்' புகைப்படத்தை வெளியிட்ட இலியானா.. குழந்தை பிறப்பது எப்போது?

நடிகை இலியானா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நிலையில் தற்போது முதல் முறையாக கர்ப்பமான வயிற்றுடன் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு

கட்டிப்பிடித்து முத்தம், பெயிண்டிங், விதவிதமான உணவுகள்: ஜெயம் ரவி மனைவி வைத்த லேடீஸ் பார்ட்டி..!

நடிகை ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளார் என்பதும் அவரது புகைப்படங்களை பார்த்து இளம் நடிகைகளுக்கு இணையாக அவர்

'தளபதி 68' படத்தில் விஜய்க்கு ஜோடி 19 வயது நடிகையா? 

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் 'தளபதி 68' படத்தில் 19 வயது நடிகை தான் நாயகியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.