இயக்குநர் சுந்தர்.சி-க்கு யோகி பாபு கொடுத்த அட்டகாசமான பரிசு… வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Thursday,October 07 2021]

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும் தற்போது பல படங்களில் கதாநாயகனாகவும் கலக்கி வரும் யோகி பாபு மகா அமாவாசையை முன்னிட்டு இயக்குநர் சுந்தர்.சி-யை நேரில் சந்தித்துள்ளார். அப்போது கையில் ஒரு அழகான பிள்ளையார் சிலையை கொண்டுசென்ற அவர் அதை இயக்குநருக்குப் பரிசாகக் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் “அரண்மனை3“ திரைப்படம் வரும் அக்டோபர் 14 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, மனோபாலா போன்ற பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் நடிகர் யோகி பாபுவும் நடித்துள்ளார். கூடவே மறைந்த நடிகர் விவேக் இந்தப் படத்தில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் யோகி பாபு இயக்குநர் சுந்தர்.சியை நேரில் சந்தித்து தனக்குப் பிடித்த பிள்ளையார் சிலையை பரிசாகக் கொடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. “அரண்மனை3“ படத்தைத் தவிர நடிகர் யோகி பாபு சூப்பர் ஸ்டாருடன் “அண்ணாத்த“ திரைப்படத்திலும் அதேபோல தல அஜித்துடன் “வலிமை“ திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதனால் யோகி பாபு ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம்தான்.

மேலும் “வீரப்பணின் கஜானா“, “பன்னிக்குட்டி“, “பிஸ்தா“, “பூச்சாண்டி“, “சலூன்“  என ஒரு டஜன் படங்களை நடிகர் யோகி பாபு தனது கைவசம் வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கடலில் ஜெட்-ஸ்கை ஓட்டி அசால்ட் காட்டிய நடிகை பிரியங்கா… வைரல் வீடியோ!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான "தமிழன்" திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா.

கருப்பு கடவுள் காஸ்ட்யூமில் பிக்பாஸ் ஸ்ருதி: வேற லெவலில் வைரல்

கடவுள் என்றாலே வண்ண வண்ண நிறங்களில் தான் இருப்பார்கள் என நமக்கு சிறுவயதிலிருந்தே முன்னோர்கள் சொல்லி கொடுத்து இருந்த நிலையில் கருப்பு நிறத்தில் கடவுள் இருப்பதாக போட்டோ ஷூட்

சி.எஸ்.கே.வுக்காக இனி தோனி விளையாட மாட்டாரா? அவரே அளித்த அதிர்ச்சி பதில்!

நான் இனிமேல் சி.எஸ்.கே.வுக்காக விளையாடுவேனா என்பது எனக்கே தெரியாது என தோனி கூறியிருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

அல்ட்ரா மாடல் உடையில் கலக்கும் பவானி ரெட்டி!

பிக்பாஸ் தமிழ் 5வது சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் இவர்களில் பிரியங்கா, ராஜூ ஜெயமோகன், பவானி ரெட்டி, நமீதா, தாமரை செல்வி, அபிஷேக் உள்பட ஒருசில போட்டியாளர்கள்

குறும்படம் போடுங்க பிக்பாஸ்: ப்ரியங்காவால் ஆவேசமான அபிஷேக்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலகலப்பான போட்டியாளரான பிரியங்காவால் ஆவேசமான அபிஷேக் ராஜா குறும்படம் போடுங்க பிக்பாஸ் என தெரிவித்தது இன்றைய மூன்றாவது புரமோ வீடியோவில் வெளிவந்துள்ளது.