close
Choose your channels

குறும்படம் போடுங்க பிக்பாஸ்: ப்ரியங்காவால் ஆவேசமான அபிஷேக்!

Thursday, October 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலகலப்பான போட்டியாளரான பிரியங்காவால் ஆவேசமான அபிஷேக் ராஜா குறும்படம் போடுங்க பிக்பாஸ் என தெரிவித்தது இன்றைய மூன்றாவது புரமோ வீடியோவில் வெளிவந்துள்ளது.

சற்று முன் வெளியான மூன்றாவது புரமோ வீடியோவில் பிரியங்காவை அழைத்து நமீதா ஒரு குற்றச்சாட்டை கூறுகிறார். காபி டீ குடித்துவிட்டு எச்சி கிளாஸ ஆங்காங்கே வைத்து விட்டு போகிறார்கள் என்றும், நான் சொன்னால் யாரும் கேட்க மாட்டேன் என்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறார்.

இதனை அடுத்து அறிவிக்கப்படாத கேப்டனான பிரியங்கா அனைவர் முன்னிலையிலும் ’டீ காபி குடித்ததற்கு அப்புறம் குடித்த கிளாஸை சிங்க் தொட்டியில் வைக்க வேண்டும் என்று கூறுகிறார். இதனை அடுத்து நமீதா ஆவேசமாக ’வெசல் வாஷிங் டீமில் உள்ளவர்கள் சிங்க் உள் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களை மட்டும் கழுவுங்கள், வெளியே வைக்கும் பாத்திரங்களை அப்படியே வைத்திருங்கள் என்று கூறுகிறார்.

அப்போது அபிஷேக் திடீரென தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, ‘இப்ப ஏன் நீ சி.எம். ஆகணுன்னு என்று சொன்னேன் என்பது புரியுதா என்று கூற உடனே பிரியங்கா, ‘எனக்கு தெரிஞ்சு அபிஷேக் தான் வெளியே வைத்திருப்பான், எதுக்குடா வெளியே வச்சிட்டு போற என்று கூற உடனே அபிஷேக் ஆவேசமாகி ‘குறும்படம் போடுங்க பிக் பாஸ், யார் வச்சதுன்னு பார்க்கலாம்’ என்று கூறுவதுடன் இன்றைய மூன்றாவது புரமோ முடிவுக்க் உவருகிறது.

மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சியில் ஒரு கலகலப்பான சண்டை இருக்கிறது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.