close
Choose your channels

பள்ளி கால தோழிகளுடன் கோவா சென்றபோது நடந்த விபத்து: வைரலாகும் கடைசி செல்பி!

Sunday, January 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 15 பெண்கள் சிறு வயதில் பள்ளியில் ஒன்றாக படித்த தோழிகளுடன் கோவாவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். 15 பள்ளி கால தோழிகளும் நீண்ட வருடங்களுக்கு பின்னர் சந்தித்த கொண்டதால் உற்சாகத்துடன் இருந்த நிலையில் இந்த தோழிகள் கோவாவுக்கு மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராமல் நடந்த விபத்தால் 10 தோழிகள் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

15 பள்ளிகால தோழிகள் சென்ற கோவாவுக்கு சென்ற வேன் ஹூப்ளி அருகே சென்றபோது திடீரென டிம்பர் லாரியுடன் மோதியதாகவும் இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் தகவல்கள் வெளிவந்துவிட்டன. மேலும் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த 15 தோழிகளும் சுற்றுலா செல்வதற்கு முன்பாக வேனில் ஏற்றுக்கொண்ட கடைசி செல்பி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சந்தித்த பள்ளிகால தோழிகள் ஒன்றாக இணைந்து சுற்றுலா சென்ற போது ஏற்பட்ட விபத்தில் டிரைவருடன் மொத்தம் 11 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos