தேர்ச்சி பெற்றது தெரியாமல், தோல்வி பயத்தில் தற்கொலை செய்த மாணவி! 

  • IndiaGlitz, [Sunday,April 28 2019]

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு வெளியான நிலையில் இந்த தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் மதுராந்தகத்தில் நிகழ்ந்துள்ளதால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த சந்தியா என்ற மாணவி கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10ஆம் வகுப்பு தேர்வை எழுதியிருந்தார். இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் அவர் நேற்று சோகமாக இருந்ததாக தெரிகிறது

இந்த நிலையில் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயம் அவரது மனதில் இருந்த நிலையில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் ஒரு பெரிய கொடுமை என்னவெனில் இன்று வெளியான தேர்வு முடிவில் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதுதான். தேர்ச்சி பெற்றது தெரியாமல் பயத்தின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினர்களை சோகக்கடலில் மூழ்கடித்துள்ளது

தேர்வில் தேர்ச்சி பெறுவது ஒன்றே வாழ்க்கையல்ல என்று மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்கள் உணர்த்த வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோளாக உள்ளது

More News

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: வழக்கம்போல் மாணவிகள் சாதனை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை 10ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

4 தொகுதி இடைத்தேர்தல்: கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட கமல் கட்சி வேட்பாளர்கள்

திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்

'செம டைட்டில்': விஜய் வாழ்த்தால் மெர்சலான நடிகர்

தளபதி விஜய்கு சினிமா துறையில் உள்ளவர்கள் பலர் தீவிர ரசிகர்கள் என்பதும் அவர்களில் ஒருவர் கே.பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு என்பதும் தெரிந்ததே.

போலீஸ் கஸ்டடியில் பிரபல இயக்குனர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல தெலுங்கு பட இயக்குனர் ராம்கோபால் வர்மா போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

4 ஆண்டுகளாக கல்லூரி மாணவியை சீரழித்த திருமணமான காமுகன் கைது!

ஈரோடு அருகே கல்லூரி மாணவி ஒருவரை கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த திருமணமான காமுகன் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.