close
Choose your channels

தேர்ச்சி பெற்றது தெரியாமல், தோல்வி பயத்தில் தற்கொலை செய்த மாணவி! 

Sunday, April 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு வெளியான நிலையில் இந்த தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் மதுராந்தகத்தில் நிகழ்ந்துள்ளதால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த சந்தியா என்ற மாணவி கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10ஆம் வகுப்பு தேர்வை எழுதியிருந்தார். இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் அவர் நேற்று சோகமாக இருந்ததாக தெரிகிறது

இந்த நிலையில் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயம் அவரது மனதில் இருந்த நிலையில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் ஒரு பெரிய கொடுமை என்னவெனில் இன்று வெளியான தேர்வு முடிவில் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதுதான். தேர்ச்சி பெற்றது தெரியாமல் பயத்தின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினர்களை சோகக்கடலில் மூழ்கடித்துள்ளது

தேர்வில் தேர்ச்சி பெறுவது ஒன்றே வாழ்க்கையல்ல என்று மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்கள் உணர்த்த வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோளாக உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.