close
Choose your channels

11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: ஆறு மாத கர்ப்பம் என அதிர்ச்சி தகவல்

Thursday, December 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருச்சியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அந்த மாணவி 6 மாத கர்ப்பமாக இருந்துள்ளார் என்று வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் திடீரென கடந்த வாரம் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து உடனடியாக அவரது பெற்றோர்கள் மாணவியை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை அளிக்கும் போது அவர் 6 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இந்த தகவலை மருத்துவர்கள் மாணவியின் பெற்றோரிடம் கூறியபோது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்

மேலும் மாணவியின் உயிரை காப்பாற்ற வேண்டுமானால் வயிற்றில் உள்ள சிசுவை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கு அந்த மாணவியின் பெற்றோர் ஒப்புக்கொள்ள அறுவை சிகிச்சை செய்து 6 மாத சிசு அகற்றப்பட்டது. இருப்பினும் மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்

இது குறித்து திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 11ஆம் வகுப்பு மாணவியின் கர்ப்பத்திற்கு காரணம் யார்? அவரை தற்கொலை செய்ய தூண்டியது யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.