12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை: டியூஷன் வாத்தியார் மீது வழக்குப்பதிவு

12 வயது சிறுவனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த டியூஷன் வாத்தியார் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதால் பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை படித்து வருகின்றனர். ஒரு சிலர் தங்கள் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க டியூஷன் வாத்தியார் ஏற்பாடு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த ஒரு பெற்றோர் தங்கள் 12 வயது பையனுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வாத்தியார் ஒருவரை ஏற்பாடு செய்தனர். 21 வயதான அந்த வாத்தியார், 12 வயது சிறுவனுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். திடீரென ஒருநாள் சிறுவனுக்கு வயிற்றுவலி வந்ததை அடுத்து அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவர்களும் சாதாரண வயிற்று வலி என நினைத்து சிறுவனுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்தனர். ஆனால் வயிற்று வலி நிற்கவில்லை. உடனே சிறுவனிடம் என்ன நடந்தது என்று விசாரித்த போது தனது டியூஷன் வாத்தியார் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கூறியதால் பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை வெளியே சொன்னால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் அந்த வாத்தியார் மிரட்டி உள்ளதால் சிறுவன் யாரிடமும் சொல்லாமல் மறைத்து உள்ளான் என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து மாணவனை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய டியூஷன் வாத்தியார் மீது காவல்துறையினர் இயற்கைக்கு மாறான செக்ஸ் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

செப்டம்பர் 19 முதல் களமிறங்குகிறார் 'தல': அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் குஷி!

செப்டம்பர் 19 முதல் அதிகாரபூர்வமாக 'தல' களம் இறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்

பயன்படுத்திய மாஸ்க், கையுறைகளை இப்படித்தான் அகற்ற வேண்டும்… மாசுகட்டுப்பாட்டு வாரியம் தகவல்!!!

பெருந்தொற்று நேரத்தில் சுய பாதுகாப்பு மிக அவசியம் என்பதை சுகாதாரத் துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வருகின்றனர்.

சாலைகள், வீதிகள், தெருக்கள், கார்கள் என எங்கு பார்த்தாலும் பிணம்!!! கொரோனாவால் தத்தளிக்கும் நாடு!!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஐபிஎல் 2020 எங்கே…. எப்போது… குறித்த முக்கிய அறிவிப்பு!!!

இந்த ஆண்டிற்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இல் நடக்க இருப்பதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டு இருக்கிறது.

விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2' படத்தை இயக்கும் தேசிய விருது பெற்ற பெண் இயக்குனர்!

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி, கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த 'நான்' என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்