பாதியில் படிப்பை விட்டு பஞ்சர் ஒட்டிய மாணவிக்கு உதவிய சிவகார்த்திகேயன்!

  • IndiaGlitz, [Thursday,January 20 2022]

படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் பணம் இல்லாத காரணத்தினால் பஞ்சர் ஒட்டும் கடையில் பணிபுரிந்து வந்த மாணவி ஒருவரை சிவகார்த்திகேயன் தனது சொந்த செலவில் படிக்க வைத்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

12ஆம் வகுப்பு படித்த தேவசங்கரி என்ற மாணவி நர்சிங் கோர்ஸ் படிக்க ஆசைப்பட்டாலும், அவரது குடும்பத்தின் வறுமை காரணமாக படிக்க முடியவில்லை. இதனை அடுத்து அவர் பஞ்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பஞ்சர் ஓட்டும் மாணவியை ஊடகம் ஒன்று பேட்டி எடுத்து செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தியை பார்த்த சிவகார்த்திகேயன் அந்த மாணவியை தொடர்பு கொண்டு ’நீ விரும்பும் படிப்பை நான் படிக்க வைக்கின்றேன், என்ன படிக்க விரும்புகிறா? என்று கேட்டதாகவும் அதற்கு தேவசங்கரி நான் நர்சிங் படிக்க விரும்புகிறேன் என்னை நர்சிங் படிக்க வையுங்கள் என்றும் கூறினாராம்.

இதனையடுத்து நாகப்பட்டினத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் அட்மிஷன் வாங்கி கொடுத்து அனைத்து செலவுகளையும் சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொண்டதாகவும் அந்த மாணவி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பொங்கல் தினத்தில் தனது குடும்பத்தினர் அனைவருக்கும் சிவகார்த்திகேயன் புது துணி எடுத்து கொடுத்ததாகவும் அந்த துணியை அணிந்து கொண்டு தாங்கள் பொங்கல் கொண்டாடியதாகவும் கூறிய தேவசங்கரி, என்னைப் படிக்க வைத்த சிவகார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி என்றும் நான் படித்து என்னை போலவே கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்வேன் என்றும் கூறியுள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதை பெரும் சூர்யா, உதயநிதி ஸ்டாலின்!

சூர்யா மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் உலகளாவிய சமுதாய ஆஸ்கார் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் படத்தை சூப்பர்ஹிட்டாக்கிய இயக்குனருடன் இணையும் சிம்பு!

முதல் படத்தையே சூப்பர்ஹிட்டாக்கிய இயக்குனருடன் நடிகர் சிம்பு இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வைரலாகும் நடிகை ஜான்வி கபூர் நீச்சல் உடை… விலையை அலசும் நெட்டிசன்ஸ்!

பாலிவுட் நட்சத்திரத் தம்பதிகளான போனி கபூர்- மறைந்த நடிகை

நடிகை கஸ்தூரிக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரல் புகைப்படம்!

நடிகை கஸ்தூரி தனது மகனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் கஸ்தூரிக்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சரியமடைந்து நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு தாமரை ஆடும் டான்ஸ்: உடன் ஆடுபவர் யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஊ சொல்றியா மாமா, ஊஊ சொல்றியா மாமா' என்ற ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா டான்ஸ் ஆடினார் என்பதும்