close
Choose your channels

முதல் படத்தை சூப்பர்ஹிட்டாக்கிய இயக்குனருடன் இணையும் சிம்பு!

Thursday, January 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதல் படத்தையே சூப்பர்ஹிட்டாக்கிய இயக்குனருடன் நடிகர் சிம்பு இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ’மாநாடு’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது என்பதும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் படங்களில் இதுவும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சிம்பு, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ’பத்து தல’ மற்றும் ‘கொரோனா குமார்’ ஆகிய படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சிம்புவின் அடுத்த படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து என்பவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ‘ஓ மை கடவுளே’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார் என்பதும் அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு-அஸ்வத் இணையும் இந்த படத்தை தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.