close
Choose your channels

சிஎஸ்கே பந்துவீச்சாளர் உள்பட 13 பேருக்கு கொரோனா: துபாயில் பரபரப்பு

Friday, August 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டிக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்ததை அடுத்து ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 8 அணி வீரர்களும் சமீபத்தில் துபாய் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் துபாய் சென்ற வீரர்கள் அனைவரும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தபடுவார்கள் என்றும் அதன்பின் பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே அவர்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் அடிப்படையில் துபாய் சென்றுள்ள ஐபிஎல் வீரர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சாளர் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர்களில் ஒருவர் பந்துவீச்சாளர் மற்றும் மீதமுள்ள 12 பேர்கள் சிஎஸ்கே அணியின் உதவியாளர்கள் என்றும் தகவல்கள்  வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

ஐபிஎல் போட்டியில் பங்கேற்க சென்ற நிலையில் சிஎஸ்கே வீரர் மற்றும் உதவியாளர்கள் 13 பேர்களுக்கு கொரோனா என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.