13 வயது சிறுமியை நரபலி கொடுத்த தந்தை: அதிர்ச்சி காரணம்

  • IndiaGlitz, [Tuesday,June 02 2020]

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 வயது சிறுமியை அவரது தந்தையே நரபலி கொடுத்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நொடியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த வித்யா என்ற 13 வயது சிறுமி, 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குளத்தில் தண்ணீர் எடுக்க சென்ற வித்யா, மர்மமான முறையில் மரணம் அடைந்திருந்தார். அவரது உடல் முழுவதும் காயம் இருந்ததால் அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை நடைபெற்றது

இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு விரோதிகள் யாராவது இருந்து அவர்கள் சிறுமியை கொலை செய்திருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள திடுக்கிடும் தகவல்படி அந்த சிறுமியை அவரது தந்தையே நரபலி கொடுத்து உள்ளார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

சிறுமி வித்யாவின் தந்தை பன்னீர்செல்வம் என்ற 55 வயது நபருக்கு ஜோசியம் மாந்திரீகம் ஆகியவற்றில் மிகுந்த நம்பிக்கை இருந்ததால் அவர் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்றும் பணக்காரர் ஆகவேண்டும் என்றும் மந்திரவாதி ஒருவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு ஒரு மந்திரவாதி பெண் குழந்தையை நரபலி கொடுத்தால் செல்வம் பெருகும் என்றும் ஆண் குழந்தை பிறக்கும் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார்

மந்திரவாதியின் பேச்சை கேட்டு தனது மகளையே பன்னீர்செல்வம் நரபலி கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சிறுமியை நரபலி கொடுத்த தந்தை பன்னீர்செல்வம் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மந்திரவாதியை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

முதல்வருக்கு அடுத்த இடத்தை ரஜினிக்கு கொடுத்த மத்திய அமைச்சர்: பெரும் பரபரப்பு

மத்திய அமைச்சர் ஒருவர் தனது ட்வீட்டில் முதல்வருக்கு அடுத்த இடத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கொடுத்து இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரோல்மாடல் இயக்குநர் மணிரத்தினம் பிறந்த தினம் இன்று...

இளைய தலைமுறை இயக்குநர் பலருக்கும் ரோல் மாடலாகவும் மந்திரச் சொல்லாகவும் இருக்கும் இயக்குநர் மணிரத்தினம் அவர்களின் பிறந்த தினம் இன்று...

விஷம் குடிப்பதை செல்பி எடுத்து தற்கொலை செய்த நடிகை: பரபரப்பு தகவல்

பெங்களூரை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஒருவர் விஷம் குடித்து கொண்டே செல்பி எடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3000ஐ நெருங்கிவிட்ட ராயபுரம், 2000ஐ நெருங்கிய 2 மண்டலங்கள்: சென்னை கொரோனா நிலவரம்!

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் தினந்தோறும் 500,600 என கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக 1000ஐ தாண்டியுள்ளதால்

2 லட்சத்தை நெருங்கிவிட்டது கொரோனா பாதிப்பு: உலக அளவில் 7வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,98,706 ஆக உயர்ந்துவிட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிவிட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.