close
Choose your channels

13 வயது சிறுமியை நரபலி கொடுத்த தந்தை: அதிர்ச்சி காரணம்

Tuesday, June 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 வயது சிறுமியை அவரது தந்தையே நரபலி கொடுத்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நொடியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த வித்யா என்ற 13 வயது சிறுமி, 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குளத்தில் தண்ணீர் எடுக்க சென்ற வித்யா, மர்மமான முறையில் மரணம் அடைந்திருந்தார். அவரது உடல் முழுவதும் காயம் இருந்ததால் அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை நடைபெற்றது

இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு விரோதிகள் யாராவது இருந்து அவர்கள் சிறுமியை கொலை செய்திருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள திடுக்கிடும் தகவல்படி அந்த சிறுமியை அவரது தந்தையே நரபலி கொடுத்து உள்ளார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

சிறுமி வித்யாவின் தந்தை பன்னீர்செல்வம் என்ற 55 வயது நபருக்கு ஜோசியம் மாந்திரீகம் ஆகியவற்றில் மிகுந்த நம்பிக்கை இருந்ததால் அவர் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்றும் பணக்காரர் ஆகவேண்டும் என்றும் மந்திரவாதி ஒருவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு ஒரு மந்திரவாதி பெண் குழந்தையை நரபலி கொடுத்தால் செல்வம் பெருகும் என்றும் ஆண் குழந்தை பிறக்கும் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார்

மந்திரவாதியின் பேச்சை கேட்டு தனது மகளையே பன்னீர்செல்வம் நரபலி கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சிறுமியை நரபலி கொடுத்த தந்தை பன்னீர்செல்வம் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மந்திரவாதியை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.