close
Choose your channels

உள்ளே இருக்குறவங்கள விட வெளியே இருந்து வர்றவன் டேஞ்சர்.. பக்கா பிளான் போடும் 14 போட்டியாளர்கள்..!

Monday, November 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதில் தற்போது 14 போட்டியாளர்கள் உள்ளனர். ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் மற்றும் ஐந்து வைல்டுகார்டு போட்டியாளர்கள் என மொத்தம் 23 போட்டியாளர்களில் 9 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர்.

இந்த நிலையில் வெளியேறிய 9 போட்டியாளர்களில் 3 போட்டியாளர்கள் மீண்டும் ரீஎன்ட்ரி ஆக இருப்பதாகவும் அவர்களுக்கும் உள்ளே இருப்பவர்களுக்கும் டாஸ்க் நடைபெற இருப்பதாகவும் அந்த டாஸ்க்கில் வெளியே இருந்து வந்தவர்கள் வெற்றி பெற்றால் உள்ளே இருப்பவர்களில் சிலர் வெளியேற்றப்படுவார்கள் என்றும் பிக் பாஸ் கூறினார்.

இந்த நிலையில் உள்ளே இருப்பவர்கள் தற்போது தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து வெளியே இருந்து வர இருப்பவர்களை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். குறிப்பாக மாயா ’கஷ்டப்பட்டு நாம் எல்லோரையும் அனுப்பிவிட்டோம், திருப்பி உள்ளே வந்தால் கஷ்டம்’ என்று கூறுகிறார்

உள்ளே இருக்கிறவங்களை விட வெளியே இருந்து வர்றவங்க டேஞ்சர் என நிக்சன் கூறுகிறார். நிக்சனுக்கு ஐஷு வந்தாலோ அல்லது விஜய் வர்மா, யுகேந்திரன் வந்தாலும் ஆபத்து என்று கூறுகின்றனர். எப்படியாவது கஷ்டப்பட்டு வெளியே இருந்து வருபவர்களை தோற்கடிக்க வேண்டும், இல்லாவிட்டால் நமக்கு ஆபத்து என்று அனைவரும் ஒன்றிணைந்து பிளான் போடுகின்றனர்.

மொத்தத்தில் 14 போட்டியாளர்களும் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து வெளியே இருந்து வருபவர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? எப்படி அவர்களை தோற்கடிக்க வேண்டும்? என்று பக்கா பிளான் போடுகிறார்கள். இந்த பிளான் பலிக்குமா? அல்லது ஏற்கனவே 14 போட்டியாளர்களின் வீக் பாயிண்ட்டை திரையில் பார்த்துவிட்டு வரும் மூன்று போட்டியாளர்களின் பிளான் பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.