close
Choose your channels

15 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுநர்!

Tuesday, April 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில், 15 வயது சிறுமியை ஓட்டுநர் ஒருவர், கட்டாய திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி கோவர்த்தனகிரி பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் பாலச்சந்திரன். இவருக்கு மனைவி மற்றும் இரண்டரை வயதில் ஒரு குழந்தை உள்ளது.

சேலத்தைச் சேர்ந்த இவர், சென்னை பாடியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவர் தான் வசித்து வரும், அதே தெருவைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த சிறுமியின் வீட்டில் பெற்றோர் யாரும் இல்லாத விஷயம் அறிந்து, அவருடைய வீட்டிற்கு சென்ற பாலச்சந்திரன் சிறுமிக்கு கட்டாய தாலி கட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

வீட்டிற்கு வந்த சிறுமியின் தாய் அவரின் கழுத்தில், தாலி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விசாரித்ததில் பாலச்சந்திரன் வீட்டிற்கு வந்ததும், வேண்டாம் என சிறுமி கூறியும், கட்டாய தாலி கட்டி அவரை பாலியல் வன்புணர்வு செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ், பாலச்சந்திரனை கைது செய்து அனைத்து திருவள்ளூர் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.