திமுக எஃகு கோட்டைக்கு ரஜினியால் சேதாராமா? வைகோ பதில்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
திமுக ஒரு எஃகு கோட்டை என்றும், ரஜினியால் அந்த கோட்டைக்கு எந்தவித சேதாரத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ரஜினியின் அரசியல் வருகையால் திமுகவுக்கு பாதிப்பு வருமா? என்ற கேள்விக்கு பதிலளித்த வைகோ, 'ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்பதே கேள்விக்குறி என்றும், அரசியலுக்கு வருவது குறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறிய வைகோ, அப்படியே ரஜினி வந்தாலும் திமுக கட்டமைத்துள்ள எஃகு கோட்டைக்கு எந்த சேதாரமும் வந்துவிடும் என தான் கருதவில்லை என்று கூறினார்
மேலும் தமிழகத்தில் திமுகவின் வெற்றிக்கு பாஜகவின் எதிர்ப்பு அலைதான் காரணம், திமுகவின் செல்வாக்கு காரணம் இல்லை என்ற ரீதியில் ரஜினி கூறியதற்கு பதிலளித்த வைகோ, ஒரு வெற்றியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்ப்பார்கள் என்றும், இது ரஜினியின் கோணம் என்றும், என்னை பொருத்தவரையில் திமுக தலைவரின் கடுமையான உழைப்பும், பாஜக தமிழகத்திற்கு செய்த துரோகத்தால் எழுந்த எதிர்ப்பு அலையும் காரணம் என்றும் வைகோ கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments