close
Choose your channels

தமிழகத்தில் ஒரு நிர்பயா! ஓடும் பேருந்தில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

Wednesday, June 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர சம்பவத்திற்கு நாடே கொந்தளித்தது. பாராளுமன்றத்தின் முன் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளும், பெண்கள் அமைப்பினர்களும் குவிந்ததால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. ஆனால் அதற்கு பின்னர் அதேபோன்ற பல சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் போராளிகளும் பெண்கள் அமைப்புகளும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையை தருவதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தமிழத்தில் சேலம் மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை இரண்டு டிரைவர்கள் மற்றும் ஒரு கண்டக்டர் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 11ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஒருவர் தனது சொந்த ஊரான நாரணம்பாளையத்திற்கு செல்ல பேருந்து ஒன்றில் ஏறியுள்ளார். இரவு நேரம் என்பதால் பேருந்தில் ஓட்டுனர்கள், நடத்துனர் தவிர வேறு யாரும் இல்லை.

இந்த நிலையில் பேருந்து சேலத்தில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் ஒரு இடத்தில் பேருந்தை நிறுத்தை டிரைவர்களும் கண்டக்டரும் மாறி மாறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் இதை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி பேருந்தை விட்டு இறக்கிவிட்டுள்ளனர்.

பேருந்தில் இருந்து அழுதுகொண்டே இறங்கிய சிறுமியை அந்த பகுதியில் உள்ள விசாரித்தபோது அந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை தெரிய வந்துள்ளது. உடனடியாக பேருந்தில் இருந்த மூவரையும் பிடித்து அந்த கிராமத்தினர் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஓடும் பேருந்தில் நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்த 4 குற்றவாளிகளுக்கு சுப்ரீம் கோர்ட் தூக்குத்தண்டனை விதித்த போதிலும் இன்னும் இதுபோன்ற கொடூரங்கள் ஆங்காங்கே நடந்து வருவது வேதனையை தருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.