close
Choose your channels

எல்லா புகழும் அவருக்கே: 15 ஆண்டு 'பருத்தி வீரன்' குறித்து நெகிழ்ச்சியுடன் கார்த்தி!

Wednesday, February 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2007ஆம் ஆண்டு இதே நாளில் வெளியான ‘பருத்தி வீரன்’ தற்போது 15 ஆண்டுகாலம் என்ற மைல்கல்லை தொட்டிருக்கும் நிலையில் இது குறித்து நெகிழ்ச்சியுடன் கார்த்தி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் எனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கியதை நான் பெருமையாக கருதுகிறேன். என்னுடைய ஒவ்வொரு அசைவும் அமீர் அவர்கள் வடிவமைத்து கொடுத்ததுதான், எனவே எல்லா புகழும் அவருக்கே. நான் கற்றுக்கொண்ட பாடங்களும் நான் செய்யும் ஒவ்வொரு வேலையும் அவர் கற்றுக்கொடுத்ததுதான். அவர் கற்று கொடுத்ததை தான் நான் இன்னும் பின்பற்றுகிறேன். அவருடன் பணிபுரிந்ததை நான் ஒரு பொக்கிஷமாக கருதுகிறேன்.

இந்த அழகான பாதையில் என்னை அழைத்துச்சென்ற அமீர் அவர்களுக்கும் ஞானவேல், அண்ணா, எனது ரசிகர்கள் மற்றும் பத்திரிகைகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் கார்த்தி தற்போது ’பொன்னியின் செல்வன்’, ’சர்தார்’, ’விருமன்’ ஆகிய மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.