16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 52 வயது பூசாரி: சிசுவை வீட்டில் புதைத்த பெற்றோர்!

  • IndiaGlitz, [Wednesday,December 18 2019]

16 வயது சிறுமி ஒருவரை 52 வயது பூசாரி கர்ப்பமாக்கிய நிலையில் சிறுமிக்கு பிறந்த சிசுவை அவருடைய பெற்றோர் வீட்டின் பின்னால் புதைத்த கொடூரம் தூத்துக்குடி அருகே நடந்துள்ளது

தூத்துக்குடி அருகே வாகைகுளம் என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் 11 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இவர் அடிக்கடி அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றிருந்த நிலையில் கோவில் பூசாரிக்கு அந்த சிறுமியின் மேல் ஒரு கண் இருந்திருக்கின்றது. இதனை அடுத்து ஒரு நாள் தனியாக வந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற அந்த பூசாரி அவருக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார்

இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் சிறுமிக்கு ஆறு மாதத்திலேயே சிசு இறந்து பிறந்து உள்ளது. இந்த விஷயம் வெளியே தெரிந்தால் தனது குடும்பத்திற்கு அவமானம் என கருதி அந்த சிசுவை வீட்டின் பின்னால் சிறுமியின் பெற்றோர்களே புதைத்து விட்டனர்

ஆனால் இந்த விஷயம் வெளியே பரவி போலீஸ் வரை சென்றுவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பெற்றோர் மற்றும் சிறுமியிடம் விசாரித்தபோது கோவில் பூசாரி தான் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. உடனடியாக பூசாரியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் புதைக்கப்பட்ட சிசு இன்று தோண்டி எடுக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்

16 வயது சிறுமியை 52 வயது பூசாரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

கமல்ஹாசனிடம் பேசியது என்ன? முக ஸ்டாலின் விளக்கம்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வரும் திமுக, இன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. இந்தக் கூட்டத்தில் குடியுரிமை

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 29 வயது பெண் செய்த திடுக்கிடும் மோசடி!

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மோசடி செய்த 29 வயது பெண் குறித்த திடுக்கிடும் மோசடிகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது

தனுஷின் 'சுருளி' படத்தில் இணைந்த பிரபல நடிகை

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சுருளி' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் முடிந்தது. இதனையடுத்து சென்னை திரும்பிய படக்குழுவினர்

இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்: 'தளபதி 64' நடிகரின் பரபரப்பு டுவீட்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகா சிறைச்சாலையில் நடைபெற்று வருவது தெரிந்ததே.

அஜித்தின் 'வலிமை': முதல் நாளே ஆரம்பித்த ஆக்சன்!

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகவிருக்கும் 'வலிமை' திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே