close
Choose your channels

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 52 வயது பூசாரி: சிசுவை வீட்டில் புதைத்த பெற்றோர்!

Wednesday, December 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 52 வயது பூசாரி: சிசுவை வீட்டில் புதைத்த பெற்றோர்!

16 வயது சிறுமி ஒருவரை 52 வயது பூசாரி கர்ப்பமாக்கிய நிலையில் சிறுமிக்கு பிறந்த சிசுவை அவருடைய பெற்றோர் வீட்டின் பின்னால் புதைத்த கொடூரம் தூத்துக்குடி அருகே நடந்துள்ளது

தூத்துக்குடி அருகே வாகைகுளம் என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் 11 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இவர் அடிக்கடி அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றிருந்த நிலையில் கோவில் பூசாரிக்கு அந்த சிறுமியின் மேல் ஒரு கண் இருந்திருக்கின்றது. இதனை அடுத்து ஒரு நாள் தனியாக வந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற அந்த பூசாரி அவருக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார்

இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் சிறுமிக்கு ஆறு மாதத்திலேயே சிசு இறந்து பிறந்து உள்ளது. இந்த விஷயம் வெளியே தெரிந்தால் தனது குடும்பத்திற்கு அவமானம் என கருதி அந்த சிசுவை வீட்டின் பின்னால் சிறுமியின் பெற்றோர்களே புதைத்து விட்டனர்

ஆனால் இந்த விஷயம் வெளியே பரவி போலீஸ் வரை சென்றுவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பெற்றோர் மற்றும் சிறுமியிடம் விசாரித்தபோது கோவில் பூசாரி தான் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. உடனடியாக பூசாரியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் புதைக்கப்பட்ட சிசு இன்று தோண்டி எடுக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்

16 வயது சிறுமியை 52 வயது பூசாரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.