செஸ் போட்டியில் உலகச் சாம்பியனையே வீழ்த்திய சென்னை சிறுவன்…. குவியும் பாராட்டு!

உலக அளவில் முக்கியத்துவம் பெற்ற மாஸ்டர் செஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவன் நார்வே நாட்டைச் சேர்ந்த உலகச் சாம்பியன் வீரரை தோற்கடித்து வெற்றிப்பெற்றுள்ளார். இந்தத் தகவல் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி தற்போது ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இதில் 16 வீரர்கள் உலகம் முழுவதிலும் இருந்து கலந்து கொண்டுள்ளனர். இதன் 8 ஆவது சுற்றில் சென்னையை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உலகின் சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனைத் தோற்கடித்து வெற்றிப்பெற்றுள்ளார். கருப்பு நிறக் காய்களைத் தேர்வுசெய்த விளையாடிய பிரக்ஞானந்தா இந்த வெற்றியை 39 ஆவது நகர்த்தலின்போது நிகழ்த்திக் காட்டினார்.

இதனால் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா 8 புள்ளிகளுடன் 12 ஆவது இடத்தில் உள்ளார். 16 வயதில் உலகச் சாம்பியன் வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா மீதான கவனம் தற்போதுஅதிகரித்திருக்கிறது. இதையடுத்து மீதமுள்ள 7 போட்டிகளில் அவர் என்ன செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

சென்னையில் கடந்த 2005 ஆகஸ்ட் 10 ஆம் தேதி பிறந்த பிரக்ஞானந்தா தனது 8 வயதில் கடந்த 2013இல் உலக யூத் சாம்பியன் பட்டத்தை வென்றார். 10 ஆவது வயதில் இளம் சர்வதேச மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார். மேலும் ரஷ்யாவின் செஸ் ஸ்டார் செர்கேவை தோற்கடித்து இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். தொடர்ந்து ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் கலந்துகொண்டுள்ள பிரக்ஞானந்தாவிற்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

More News

எலான் மஸ்க்கின் புதிய காதலி யார் தெரியுமா? வைரலாகும் தகவல்!

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க்கின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மின்சார கார் உற்பத்தி பற்றிய தகவல்கள்

விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 3 வேட்பாளர்கள் வெற்றி!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சிறையில் அடைப்பு: 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் வெற்றி

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இன்று காலை 8 மணி முதல் தேர்தல்

அபிராமி இடுப்பை கிள்ளுரான் பாலா: வனிதாவிடம் புலம்பிய நிரூப்

அபிராமியின் இடுப்பை கிள்ளியதாக வனிதாவிடம் நிரூப் புலம்பிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.