திருமணமான 20 நாளில் பெண் சாப்ட்வேர் எஞ்சினியர் கொலை:: கணவரே கொலை செய்தாரா?

  • IndiaGlitz, [Wednesday,December 04 2019]

பெற்றோரை எதிர்த்து காதலித்த இளைஞனை திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர் திருமணமான இருபதாவது நாளில் கொலை செய்யப்பட்டு கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சனத்நகர் என்ற பகுதியை சேர்ந்த பூர்ணிமா என்ற இளம் பெண் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தசரி கார்த்திக் என்ற இளைஞனை கடந்த சில ஆண்டுகளாக காதலித்தார். இந்த காதலுக்கு பூர்ணிமாவின் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. இதனையடுத்து பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கார்த்திக்கை அவர் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் சனத் நகரில் உள்ள ஒரு பகுதியில் தனிவீடு எடுத்து வாழ்ந்து வந்தனர்

இந்த நிலையில் நேற்று பூர்ணிமா தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த பூர்ணிமாவின் பெற்றோர்கள் மகளின் கொலைக்கு அவரது கணவர் கார்த்திக் தான் காரணம் என்றும், அவர் மீது வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் தங்கள் உறவினர்களுடன் சனத் நகர் போலீஸ் ஸ்டேஷன் முன் போராட்டம் நடத்தினார்

இதனையடுத்து போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான இருபதாவது நாளே இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

'தர்பார்' படத்தின் சூப்பர் அப்டேட்: ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ஐ.ஐ.டி கேரள மாணவி செல்போனில் இருந்த தகவல்கள் உண்மை. மரண வாக்குமூலமாக எடுத்துக்கொள்ளலாம், தடவியல் துறை தகவல்

சென்னை ஐ.ஐ.டியில் பாத்திமா லத்தீப் என்னும் மாணவி எம்.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். இவர் கேரளா மாநிலம் கொல்லம் கிளிகொள்ளுர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

நானே ஒரு பொறம்போக்கு..பரதேசி.. என்னையெல்லாம் ஒன்னுமே செய்ய முடியாது..நேற்று வெளிவந்த வீடியோவில், நித்தியானந்தா.

தனது ஆஸ்ரமத்திற்கு பிரியானந்தா என்ற பெண்ணை ஆதீனமாக்கி இருப்பதா&#

கார் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த நிலையிலும் டிக்டாக்: இளம்பெண்களின் அட்டகாசம்!

அமெரிக்காவில் 16 வயதேயான இரண்டு இளம்பெண்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு வளைவில் அந்த கார் கவிழ்ந்தது. இதனை அடுத்து காரிலிருந்து வெளியே வர முடியாமல்

வெங்கட்பிரபுவுடன் இணையும் ராகவா லாரன்ஸ்: ஒரு ஆச்சரிய அறிவிப்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பார்ட்டி' என்ற திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் சிம்புவை வைத்து இயக்கும் 'மாநாடு'