close
Choose your channels

திருமணமான 20 நாளில் பெண் சாப்ட்வேர் எஞ்சினியர் கொலை:: கணவரே கொலை செய்தாரா?

Wednesday, December 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெற்றோரை எதிர்த்து காதலித்த இளைஞனை திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர் திருமணமான இருபதாவது நாளில் கொலை செய்யப்பட்டு கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சனத்நகர் என்ற பகுதியை சேர்ந்த பூர்ணிமா என்ற இளம் பெண் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தசரி கார்த்திக் என்ற இளைஞனை கடந்த சில ஆண்டுகளாக காதலித்தார். இந்த காதலுக்கு பூர்ணிமாவின் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. இதனையடுத்து பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கார்த்திக்கை அவர் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் சனத் நகரில் உள்ள ஒரு பகுதியில் தனிவீடு எடுத்து வாழ்ந்து வந்தனர்

இந்த நிலையில் நேற்று பூர்ணிமா தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த பூர்ணிமாவின் பெற்றோர்கள் மகளின் கொலைக்கு அவரது கணவர் கார்த்திக் தான் காரணம் என்றும், அவர் மீது வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் தங்கள் உறவினர்களுடன் சனத் நகர் போலீஸ் ஸ்டேஷன் முன் போராட்டம் நடத்தினார்

இதனையடுத்து போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான இருபதாவது நாளே இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.