இளம் பெண் பொறியாளர் சுட்டுக் கொலை: காதலன் கைவரிசையா?

  • IndiaGlitz, [Thursday,June 01 2017]

தலைநகர் டெல்லியை அடுத்த நொய்டா என்ற பகுதியில் அதிகாலையில் இளம்பெண் பொறியாளர் ஒருவர் அவர் தங்கியிருந்த வீட்டில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைச்சம்பவத்திற்கு கொல்லப்பட்ட இளம்பெண்ணின் காதலர் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

டெல்லியின் முன்னணி நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிபுரியும் அஞ்சலி ரத்தோர் என்பவருக்கு இன்று அதிகாலை மொபைல்போனில் அழைப்பு வந்தது. போன் பேசிக்கொண்டே வீட்டின் கதவை திறந்து அவர் படியில் இறங்கியுள்ளார். அந்த சமயத்தில் மர்ம நபர் ஒருவர் அஞ்சலியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அஞ்சலியுடன் தங்கியிருந்த அவரது தோழிகள் உடனே கீழே வந்து பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்,. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் நொய்டா எஸ்பி அருண் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தக் கொலைக்குப் பின்னால் அந்தப் பெண்ணின் காதலர் இருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

கடைசி நிமிடத்தில் அண்ணனை தள்ளிவிட்டு தாலி கட்டிய தம்பி ! மணமகள் வீட்டார் அதிர்ச்சி

திருப்பத்தூரில் நடந்த திருமணம் ஒன்றில் மணமகளுக்கு தாலி கட்ட வேண்டிய மணமகனை அவரது தம்பி...

உலக அளவில் சாதனை படைத்து வரும் இந்திய குழந்தைகள்

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் US Scripps National Spelling Bee என்ற ஸ்பெல்லிங் போட்டிகள் 6 முதல் 15 வயது...

கலைஞர் கருணாநிதிக்கு மிக நெருக்கமான பிரபல கவிஞர் காலமானார்

பிரபல தமிழ் கவிஞரும், திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு மிக நெருக்கமானவருமான கவிக்கோ அப்துல்ரகுமான்...

ஜி.வி.பிரகாஷ் பக்கம் திரும்பிய சீமானின் 'கோபம்' ஆன பார்வை

கடந்த சில நாட்களாக ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தனது கோபமான கருத்துக்களை நாம் தமிழர்...

தமிழக முதல்வருக்கு கிடைத்த புதிய பதவி! பொதுமக்கள் வாழ்த்து

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அரசியல் ஸ்திரமற்ற தன்மையும், ஆட்சியில் ...