close
Choose your channels

ஜி.வி.பிரகாஷ் பக்கம் திரும்பிய சீமானின் 'கோபம்' ஆன பார்வை

Friday, June 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தனது கோபமான கருத்துக்களை நாம் தமிழர் இயக்கத்தின் நிறுவனரும் பிரபல இயக்குனருமான சீமான் தெரிவித்து வரும் நிலையில் தற்போது அவரது பார்வை ஜி.வி.பிரகாஷ் பக்கம் திரும்பியுள்ளது.

ஆம், நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஒரு படத்தை சீமான் இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தின் ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த செய்தி தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதோடு, இந்த படத்திற்கு 'கோபம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என தெரிகிறது.

ஜி.வி.பிரகாஷுடன் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சீமான் கடைசியாக கடந்த 2008ஆம் ஆண்டு 'வாழ்த்துக்கள்' என்ற படத்தை இயக்கினார் என்பதும் அதன்பின்னர் அவர் முழுநேர அரசியலுக்கு திரும்பிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.